விளையாட்டு

டி.என்.பி.எல். போட்டிக்கான நேரடி டிக்கெட் விற்பனை தொடக்கம்! 

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 போட்டிகளுக்கான நேரடி டிக்கெட் விற்பனை இன்று (ஜூலை 03) சேலத்தில் தொடங்கியுள்ளது. 

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி என்றழைக்கப்படும் டி.என்.பி.எல். போட்டிகள் வரும் ஜூலை 05- ஆம் தேதி முதல் ஜூலை 11- ஆம் தேதி வரை சேலம் மாவட்டம், வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெறவுள்ளன. 

இந்த போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு PAYTM INSIDER என்ற இணையதளம் மூலம் தொடங்கியுள்ள நிலையில், தற்போது, வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் அலுவலகம் மற்றும் எஸ்.டி.சி.ஏ. அலுவலகம் (காந்தி ஸ்டேடியம்) ஆகிய இரண்டு கவுண்டர்களில் இன்று (ஜூலை 03) காலை 10.00 மணிக்கு தொடங்கியுள்ளது. 

தவறுதலான டிக்கெட்டுகளுக்கு எந்த வகையிலும் டி.என்.பி.எல். நிர்வாகம் பொறுப்பேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.