ட்ரெண்டிங்

வெள்ளிப் பொருட்களைத் திருடியவர்களைத் தேடும் காவல்துறை! 

சேலத்தில் கடையின் பூட்டை உடைத்து சுமார் 10 கிலோ மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களைத் திருடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

கொண்டலாம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த அங்கமுத்து என்பவர் கருங்கல்பட்டியில் வெள்ளிப் பொருட்கள் விற்பனை கடையை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மற்றும் பக்ரீத் பண்டிகைக்காக இரண்டு நாட்களுக்கு கடை விடுமுறை விடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து 10 கிலோ எடையுள்ள வெள்ளி கொலுசுகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றனர். இது குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும், சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.