ட்ரெண்டிங்

ஜூன் 20 முதல் 29 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! 

வரும் ஜூன் 20- ஆம் தேதி முதல் ஜூன் 29- ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவலர் ஆய்வுக்கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு, வரும் ஜூன் 20- ஆம் தேதி முதல் ஜூன் 29- ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடத்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

காலை 09.30 மணிக்கு பேரவைத் தொடங்கவுள்ள நிலையில், காலை, மாலை என இரு வேளைகளிலும் அவைக் கூடவுள்ளது. மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முன்கூட்டியே தொடங்குகிறது எனபது குறிப்பிடத்தக்கது.