ட்ரெண்டிங்

ரயில் பயணிகளின் கவனத்திற்கு....சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

ரயில் பயணிகளின் கவனத்திற்கு....சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

பராமரிப்புப் பணிகள் காரணமாக, ஈரோட்டில் இருந்து சேலம் வழியாக ஜோலார்பேட்டைக்கு இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12- ஆம் தேதி மட்டும் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி மரியா மிச்சல் (Maria Michael, Public Relations Officer) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஜோலார்பேட்டை ரயில்வே யார்டு பகுதியில் தண்டவாளத்தை புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த பணிகளை எளிதாக்க செய்யக்கூடிய வகையில், வரும் ஆகஸ்ட் 12- ஆம் தேதி அன்று ஈரோட்டில் இருந்து காலை 06.25 மணிக்குப் புறப்பட்டு, நண்பகல் 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றயடையும் 06412 எண் கொண்ட ரயில் சேவை ரத்துச் செய்யப்படுகிறது. 

அதேபோல், ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 03.10 மணிக்கு புறப்பட்டு, இரவு 07.45 மணிக்கு ஈரோட்டிற்கு சென்றடையும் 06411 என்ற எண் கொண்ட ரயில் சேவை ரத்துச் செய்யப்படுகிறது. ஒருநாள் மட்டும் இத்தகைய ரயில் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது". இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.