ட்ரெண்டிங்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 403 மதுபாட்டில்கள் பறிமுதல்! 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 403 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 19) நடைபெறவுள்ள நிலையில், மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கள்ளச்சந்தையில் மது விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கொத்தாம்பாடி பகுதியில் ராயர் என்பவரது வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 403 மதுபாட்டில்களை காவல்துறையினர் கைப்பற்றினர். 

மேலும், தலைமறைவான ராயரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.