ட்ரெண்டிங்

டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு! 


டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் போது செல்போன் பேசிய படி காரை இயக்கிய டிடிஎஃப் வாசன் மீது கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து கைது செய்த காவல்துறையினர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

அப்போது, "நான் கார் வேகமாக ஓட்டவில்லை; என் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர். நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்; தற்போது திருந்தி வாழ்ந்து வருகிறேன்" என்று டிடிஎஃப் வாசன் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. 

இதையடுத்து, டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.