ட்ரெண்டிங்

மான் முட்டியதில் ஊழியர் உயிரிழப்பு! 

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் மான் முட்டியதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஊழியர் தமிழ்ச்செல்வன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

சேலத்தில் உள்ள புகழ்பெற்ற உயிரியல் பூங்கா என்றால் அது குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா தான். உயிரியல் பூங்காவில் வனத்துறையின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் தமிழ்ச்செல்வன், முருகேசன் ஆகியோர் வழக்கம் போல் மான்களுக்கு உணவு வைத்துள்ளனர். அப்போது, மான் திடீரென்று முட்டியதில் தமிழ்ச்செல்வன் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

மற்றொரு ஊழியர் முருகேசன், படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து தகவலறிந்த கன்னங்குறிச்சி காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு சென்று பார்வையிட்டு, வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவத்தால் பூங்காவில் இருந்த சுற்றுலாப் பயணிகள் கடும் அச்சமடைந்தனர்.