ட்ரெண்டிங்

உடல்நலக்குறைவால் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி! 

சேலம் மாவட்டம், குப்பனூர் அருகே உள்ள ஆச்சாங்குட்டப்பட்டியில் இயங்கி வருகிறது சேலம் பாலிகிளினிக் மருத்துவமனைக்கு சொந்தமான நர்சிங் கல்லூரி. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவிகள், கல்லூரியின் தங்கும் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம் போல் விடுதியில் மாணவிகள் உணவுகளை உட்கொண்டுள்ளனர். அதில் சுமார் 60 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து. அந்த மாணவிகளை சக மாணவிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர், மேல் சிகிச்சைக்காக அனைத்து மாணவிகளும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு மாணவிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்த அவர்களது உறவினர்கள், மருத்துவமனை முன்பு குவிந்து கதறி அழுதனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.