ட்ரெண்டிங்

அகில இந்திய துணைத் தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

 

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அகில இந்திய துணைத் தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளதாவது, சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2017- ல் இரண்டாண்டு தொழிற்பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, தேர்வில் கலந்துகொள்ள இயலாத மற்றும் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணைத் தொழிற் தேர்வு (Supplementry) மார்ச் 2024-ல் நடைபெற உள்ளது. எனவே, பயிற்சி காலத்தை நிறைவாக முடித்து தேர்ச்சி அடையாத தேர்வு எழுத விருப்பமுள்ள பயிற்சியாளர்கள் சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று வரும் பிப்ரவரி 14- ஆம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளவும்.

 

மேலும் விவரங்களுக்கு சேலம் 7 அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் / முதல்வர் அவர்களை 94990- 55828 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.