சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையினை ஏற்று, ஏற்காடு கோடைவிழா மற்றும் மலர்க்கண்காட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 47- வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடைபெற்று வருகிறது. மலர்க்கண்காட்சியைக் காண சேலம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், ஏற்காடு கோடை விழா நாளையுடன் (மே 26) நிறைவடைந்த நிலையில், வரும் மே 30- ஆம் தேதி வரை கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நீட்டிக்கப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள் நிரம்பி வழிகின்றன. வியாபாரம் சூடுபிடித்துள்ளதால் சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.