ட்ரெண்டிங்

தானாக பற்றி எரியும் பைக்குகள்- அரசு எச்சரிக்கை! 

சமீப காலமாக இருசக்கர வாகனங்கள் தானாகப் பற்றி எரியும் விபத்துகள் அவ்வப்போது நிகழ்ந்து வரும் நிலையில், வாகன ஓட்டிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இருசக்கர வாகன உரிமையாளர்கள், வாகனங்களில் தேவையின்றி மாற்றங்கள் செய்யக்கூடாது; மோட்டார் வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத CNG அல்லது LPG மாற்றங்கள் செய்யக்கூடாது; வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்வது குற்றம்.

அங்கீகரிக்கப்படாத, தகுதியற்ற நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.