ட்ரெண்டிங்

சேலம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை! 

சேலம் மாவட்டம், ஓமலூர், காமலாபுரம், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, வின்சென்ட், கன்னங்குறிச்சி, கோரிமேடு, ஏற்காடு அடிவாரம், பொன்னம்மாப்பேட்டை, பட்டைக்கோவில், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஜங்சன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. 

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருவதால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

இதனிடையே, சேலம் மாநகர் மற்றும் புறநகா் பகுதிகளில் அடுத்த 4 மணி நேரத்திற்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் கவியானந்த் தகவல்!