ட்ரெண்டிங்

சேலம் மாணவிக்கு HCL நிறுவனத்தில் பணி! 

சேலம் குகையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி சிவானி ஸ்ரீ. இந்த மாணவி தான் படிக்கும் நாட்களிலேயே தமிழ்நாடு முதலமைச்சரின் 'நான் முதல்வன்' திட்டத்தில் சேர்ந்து பயிற்சியும் பெற்று வந்தார். 

தற்போது 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவி சிவானி ஸ்ரீ, 569 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். அந்த மாணவிக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கி வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர். 

மாணவிக்கு எதிர்ப்பாராத விதமாக HCL நிறுவனம் சர்ப்ரைஸ் அளித்துள்ளது. அது என்னவென்றால், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாணவி சிவானி ஸ்ரீக்கு பணி வழங்குவதாகவும், பணி பயிற்சி காலத்திலேயே அவருக்கு உயர்கல்வியையும் வழங்க உள்ளதாகவும், அதற்கான முழு செலவையும் தங்களது நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.