கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வரும் சூழலில் சில இடங்களில் மழை பெய்து வெப்பத்தைத் தணித்துள்ளது.
சுற்றுலா தலமான ஏற்காட்டில் கடந்த சில நாட்களாகவே இதுவரை இல்லாத வகையில் வெயில் பதிவாகி வந்தது. இந்த நிலையில், நேற்று (மே 03) பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. இதனால் விடுமுறையைக் கொண்டாட ஏற்காடு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ஆம்பூரை அடுத்த மாதனூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென மாலை பொழுதில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
வெயிலில் வாடிய மக்கள் ஆலங்கட்டி மழையால் சிறிது நேரம் வெப்பம் தணிந்து இதமான சூழலை அனுபவித்தனர்.