ட்ரெண்டிங்

சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக உணவகத்தில் தீ விபத்து! 

சேலம் மாவட்டம், ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. 

வெங்கடேஷ் என்பவர் நடத்தி வரும் உணவகத்தில் எரிவாயு கசிவுக் காரணமாக தீ பற்றியது. தீ மளமளவென பரவியதால் ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயினைக் கட்டுப்படுத்தி சிலிண்டர்களை அகற்றினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. எனினும், உணவகத்தில் இருந்த பெரும்பாலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. 

தீ விபத்து குறித்து ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.