ட்ரெண்டிங்

ரயில் பயணிகளின் கவனத்திற்கு! 

நாளை (ஏப்ரல் 29) கோவை- சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காட்பாடி ரயில்வே யார்டில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் நாளை (ஏப்ரல் 30) மட்டும் கோவை- சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12680) காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும்; சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படாது. 

மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண் 12679) காட்பாடியில் இருந்து புறப்படும்; சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படாது. எனவே, பயணிகள் இதனை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு ரயில்வே அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.