ட்ரெண்டிங்

கதிர் அறுக்கும் இயந்திரத்தின் ஓட்டுநர் மீது தாக்குதல்! 

சேலம் மாவட்டம், தலைவாசலில் ஊதியத்தொகை கேட்ட கதிர் அறுக்கும் இயந்திரத்தின் ஓட்டுநரைத் தாக்கியது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வடக்குமரை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மூர்த்தி, நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். ஆனால் முறையாக ஊதியம் தராததால் வேறு இடத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இது குறித்து அறிந்த மூர்த்தி, நிலுவையில் உள்ள ஊதியத்தைத் தருவதாகக் கூறி, அவரை அழைத்துச் சென்று கட்டி வைத்து தாக்கியதுடன், பாதி வழியிலேயே விட்டு விட்டு சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதில் காயமடைந்த சிறுவன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.