ட்ரெண்டிங்

2-வது மினி சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடக்கம்! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் மாநில அளவிலான 2-வது மினி சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கின. சாப்ட் டென்னிஸ் அகாடமியில்  ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

இதில் சுமார் 25 மாவட்டங்களைச் சேர்ந்த 300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். ஒற்றையர், இரட்டையர், கலப்பட இரட்டையர், குழுவாக போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியின் தொடக்க சுற்றில், ஆடவர் இரட்டையர் பிரிவில் திருப்பூர் அணியும், மகளிர் பிரிவில் ராணிப்பேட்டை அணியும் வெற்றி பெற்றன. 

இதைத் தொடர்ந்து, ஆடவர் ஒற்றையர் பிரிவில் கடலூர், ராணிப்பேட்டை வீரர்களும், மகளிர் ஒற்றையர் பிரிவில் திருப்பூர், கோவை வீராங்கனைகளுக்கு விளையாடி வருகின்றனர். இந்த போட்டிகள், இன்றும், நாளையும் நடைபெறும் நிலையில், வெற்றி பெறும் வீரர்கள், சேலத்தில் நடைபெறும் தென்னிந்திய அளவிலான போட்டிக்கு தகுதிப் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.