ட்ரெண்டிங்

தகாத உறவு விவகாரத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு- 4 பேர் கைது!

தகாத உறவு விவகாரத்தில் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு- 4 பேர் கைது! 

மதுரை மாவட்டம், ஆனையூரில் வசித்து வருபவர் இளங்கோவன் (வயது 44). இவர் ஓட்டுநராகப் பணிப்புரிந்து வருகிறார். இவரது மனைவி ஜோதி, இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம், சூரமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் குமார் என்பவருக்கும், ஜோதிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தாகக் கூறப்படுகிறது.  

இந்நிலையில், ஆகஸ்ட் 6- ஆம் தேதி இளங்கோவன் உள்ளிட்டோர் மதுரையில் இருந்து காரில் வந்து வழக்கறிஞர் செந்தில் குமாரைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவர்களை பிடித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதைத் தொடர்ந்து, இளங்கோவன், மணிகண்டன் சிக்கந்தர்பாஷா, ஆனந்தபாபு ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. 

தாக்குதலில் படுகாயமடைந்த வழக்கறிஞர் செந்தில் குமார், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த சம்பவம் கோரிமேடு பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.