ட்ரெண்டிங்

கூட்டணி பேச்சுவார்த்தை- குழு அமைத்தது தே.மு.தி.க.!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. உடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் நடத்தியிருந்தனர். 

இந்த சூழலில், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நான்கு பேர் கொண்ட குழுவை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அந்த குழுவில், தே.மு.தி.க.வின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணைச் செயலாளர் பார்த்தசாரதி, தே.மு.தி.க.வின் அவைத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

இந்த குழு அ.தி.மு.க.வின் தொகுதிப் பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.