ட்ரெண்டிங்

விரைந்து முடிக்கப்பட்ட எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள்! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் மந்தமாக நடைபெற்ற எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள், ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, அப்பணிகள் ஒரே நாளில் முடிக்கப்பட்டனர். 

கிராமத்திற்கு செல்லும் பாதையை மறைத்து கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, ஆட்டுக்காரனூரில் குடியிருப்புப் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டதால், அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில், இந்த வழியாகச் சென்று வந்தனர். 

இது குறித்து ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியான நிலையில், அதிகாரிகள் உடனடியாகப் பணிகளை முடித்து, போக்குவரத்திற்கு வழிவகைச் செய்துள்ளனர்.