ட்ரெண்டிங்

விதிகளை மீறிய 142 வாகனங்கள் பறிமுதல்! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் போக்குவரத்து விதிகளை மீறிய 142 வாகனங்களைப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

விபத்துகளைத் தடுக்கும் வகையில், ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்போது போக்குவரத்து விதிகளை மீறி இயக்கிய 1,570 வாகனங்களுக்கு ரூபாய் 78 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும், விதிகளை மீறிய 36 லாரிகள் உள்பட 142 வாகனங்களையும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.