ட்ரெண்டிங்

பழமை வாய்ந்த கோதண்டராம சுவாமி கோயிலில் தேரோட்டம்! 

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. 

கடந்த ஏப்ரல் 15- ஆம் தேதி அன்று கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கிய நிலையில் வெகு சிறப்பாக நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயிலில் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. 

முன்னதாக, கோதண்டராமர்- சீதாவின் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில், ராமர் வந்து தங்கியதாக வரலாறுகள் கூறுகின்றனர்.