ட்ரெண்டிங்

வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான அறைகள் தயார்! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கான அறைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.  

கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சேலம் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள Strong Rooms எனப்படும் உயர் ரக பாதுகாப்புடன் கூடிய அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

இங்கு சட்டமன்றத் தொகுதி வாயிலாக 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. இதனிடையே, வாக்குச்சாவடி மையங்களின் பாதுகாப்புப் பணிக்காக காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.