ட்ரெண்டிங்

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்! 

சேலம் மாவட்டம், ஓமலூரில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். 

ஓமலூர், தாரமங்கலம், காடையாம்பட்டி ஆகிய பகுதிகளில் கிராமப் புறங்களில் உள்ள சந்துக் கடைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது. இது தொடர்பான செய்தி வெளியான நிலையில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவு படி, சிறப்பு பிரிவு காவல்துறையினர் கோட்டமேட்டுப்பட்டி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது, வீட்டிற்குள் பதுக்கப்பட்டிருந்த 100- க்கும் அதிகமான மதுபாட்டில்களை பறிமுதல் செய்த அவர்கள், அவற்றை பதுக்கிய ரத்தனவேல் என்பவரை கைது செய்துள்ளனர். 

ஓமலூர் காவல் நிலைய எல்லையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வோரை கைது செய்ய காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.