ட்ரெண்டிங்

7 லட்சம் ரூபாய் மதிப்பிலான புடவைகள் பறிமுதல்! 


ஓமலூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 797 புடவைகளை பறிமுதல் செய்துள்ளனர். 

சேலம் மாவட்டம், துளசம்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை சோதனையிட்டதில் 139 பட்டு புடவைகளும், ஜலகண்டாபுரத்தில் சோதனையின் போது 658 கூறப்பட்டு புடவைகளும் ஆவணங்கள் இல்லாமல் எடுத்து வரப்பட்டதால் பறிமுதல் செய்தனர். 

ஒரே நாளில் அடுத்தடுத்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டுப்புடவைகளைப் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.