ட்ரெண்டிங்

புதிய உச்சத்தை எட்டிய மின்நுகர்வு! 

தமிழ்நாட்டின் மின்நுகர்வு 430.13 மில்லியன் யூனிட் என்ற அளவில் பபுதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

தமிழ்நாட்டின் மின்நுகர்வு அதிகரித்துள்ளது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் மின்சார நுகர்வு புதிய உச்சத்தை நேற்று எட்டி இருக்கிறது. 430.13 மில்லியன் யூனிட் அளவுக்கு இன்று மின்சார நுகர்வு இருந்திருக்கிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான வழிகாட்டுதலில், தொலைநோக்குப் பார்வை, சிறந்த திட்டமிடல், மின் உற்பத்தியை பெருக்குவதற்கு முக்கியத்துவம் என திராவிட மாடல் அரசின் சீரிய முயற்சியின் காரணமாக, மின்வெட்டு இல்லாத தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம். 

தொழில்துறையினர், வணிகர்கள், விவசாயப் பெருமக்கள், இல்லத்தரசிகள் எவரும் இன்னலுக்கு ஆளாகாத வகையில் மின் விநியோகம் சீராக நடந்து வருகிறது. இன்னும் கூடுதல் மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டாலும் அதையும் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு அமைச்சர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.