ட்ரெண்டிங்

தேசிய கைத்தறி தினம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி!

தேசிய கைத்தறி தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சியினை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் திறந்து வைத்தனர். 

அதைத் தொடர்ந்து, அமைக்கப்பட்டிருந்த அரங்குகளுக்குள் சென்ற மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கைத்தறியால் தயார் செய்யப்பட்ட நூல் சேலைகள், வேட்டிகள், பட்டு சேலைகள் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். அத்துடன், கைத்தறி நெய்வது தொடர்பான செயல்முறையை விளக்கும் வகையில், கைத்தறி உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, சேலம் சரக கைத்தறித்துறை துணை இயக்குநர் மாதேஸ்வரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.