ட்ரெண்டிங்

வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அ.தி.மு.க. வேட்பாளர்! 

பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, இன்று (மார்ச் 25) தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், தங்களது தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். 

அந்த வகையில், சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷ், மாவட்டத் தேர்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தாதேவியிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். 

சேலம் தொகுதியின் அ.தி.மு.க. பொறுப்பாளர், அ.தி.மு.க.வின் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், தே.மு.தி.க.வின் சேலம் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

இன்று அதிகளவில் வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்ததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் பரபரப்புடன் காணப்பட்டது.