ட்ரெண்டிங்

ரூபாய் 10 கோடி ரூபாய் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்! 

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடைச் செய்யப்பட்ட லாட்டரி சீட்டை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார். மேட்டூர் பேருந்து நிலையம் அருகே கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை மேட்டூர் காவல்துறையினர் கைது செய்தனர். 

மேட்டூர் பேருந்து நிலையம் அருகே தடைச் செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து, உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். 

இதனையடுத்து, சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.