சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே.
மார்ச் 10, 24 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்டரலுக்கும், மார்ச் 11, 25 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.