சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஆடுகள் திருடுப் போவதாக விவசாயிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதில், சொகுசு காரில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து ஆடுகளைத் திருடிச் செல்வது பதிவாகியுள்ளது. இது குறித்து மல்லியகரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதுடன், ஆடுகளைத் திருடிய மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.
மர்மநபர் ஆடுகளைத் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.