ட்ரெண்டிங்

நண்பர்களுடன் சென்று காதலியை கடத்திய காதலன்!

ஜலகண்டாபுரம் அருகே திருமண நிச்சயத்திற்கு காரில் சென்ற மணப்பெண்ணை ஆறு பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்த ஹரி அரவிந்தன் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து காரில் கடத்திச் சென்று திருமணம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இருவரும் திருமணம் செய்துக் கொண்ட புகைப்படத்தை தங்களது பெற்றோருக்கு அனுப்பியுள்ளனர். 

இதையடுத்து, பெண்ணை கடத்திய ஆறு பேரை கைது செய்துள்ள ஜலகண்டாபுரம் காவல்துறையினர், அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், ஜலகண்டாபுரம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.