ட்ரெண்டிங்

திருவிழாவில் பங்கேற்று வாக்கு சேகரித்த பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள்! 


மக்களவைத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து, ஓமலூர் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பா.ம.க.வினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

சேலம் மாவட்டம், ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் மாசி மாதத்தையொட்டி, கோயில் திருவிழாக்கள் தொடங்கிக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோயில் திருவிழாக்களில் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு மக்களவைத் தேர்தலுக்கு ஆதரவுக் கேட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக, பச்சனம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்ட பா.ம.க.வைச் சேர்ந்த சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருள் மற்றும் மேட்டூர் எம்.எல்.ஏ. சதாசிவம் ஆகியோர் மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். 

அதைத் தொடர்ந்து, ஆடலும், பாடலும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்.