ட்ரெண்டிங்

நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் புகைப்படக் கண்காட்சி! 


கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி, சேலம் மாவட்டத்தில் இன்று (பிப்.27) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற "நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர்” என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியினை திறந்து வைத்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் என்ற தலைப்பிலான விழா மலரினையும் வெளியிட்டார். அத்துடன், புகைப்படக் கண்காட்சியினை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். 


இந்த விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. 

பொதுப் பணித்துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்தரமோகன் இ.ஆ.ப., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதம் சிகாமணி, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.