ட்ரெண்டிங்

பிப்.29- ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு! 

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற பிப்ரவரி 29- ஆம் தேதிவியாழக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி இ.ஆ.ப. அறிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர்.இரா.பிருந்தாதேவி. இ.ஆ.ப. தெரிவித்துள்ளதாவது, "சேலம் மாவட்ட பிப்ரவரி 2024 மாதத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற பிப்ரவரி 29- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண்.215- ல் நடைபெற உள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.