ட்ரெண்டிங்

புதுமண தம்பதிக்கு பூண்டை பரிசாக வழங்கிய நடிகர் பெஞ்சமின்! 

புதுமண தம்பதிக்கு பூண்டை பரிசாக வழங்கிய நடிகர் பெஞ்சமின்! 

சேலத்தில் புதுமண தம்பதிக்கு பூண்டு மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பூண்டின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி இந்த வினோத வரவேற்பில் நண்பர்கள் ஈடுபட்டனர். 

சேலம் மாவட்டம், அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திரைப்பட துணை நடிகர் கார்த்திகேயன்- இந்துஜா தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது, மணமகனின் நண்பர்கள் பூண்டு மாலையை அணிவித்தும், திரைப்பட நடிகர் பெஞ்சமின் 5 கிலோ பூண்டை திருமண பரிசாக வழங்கி, வாழ்த்துத் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் பெஞ்சமின், பூண்டின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூண்டின் விலை உயர்வால் சாமானிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.