ட்ரெண்டிங்

தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் சேலம் சிறுவன் சாதனை!

 

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த சுரேஷ்பாபு- ஜெஸினா தம்பதியின் மகன் சான்லிஜோஸ்வின். நான்கு வயதான சிறுவன், சேலம் அழகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வம் கொண்ட சிறுவன், மாவட்ட, மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பதக்கங்களைக் குவித்துள்ளார்.

 

இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி சிறுவன், பதக்கங்களைக் குவித்துள்ளார். நான்கு வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் 1,000 மீட்டர் தூரத்தில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் தூரத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளார்.

 

சாதனை சிறுவனுக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.