ட்ரெண்டிங்

பொதுமக்களிடம் உறுதியளித்த பா.ம.க. எம்.எல்.ஏ. அருள்!

 

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செம்மண்கூடல் ஊராட்சி, ரங்கநாதபுரத்தில் வசிக்கும் மக்களை இன்று (பிப்.17) காலை 11.00 மணிக்கு அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், பா.ம.க.வின் மாவட்டச் செயலாளருமான அருள் நேரில் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்தார். 

 

அப்போது சட்டமன்ற உறுப்பினரிடம், அப்பகுதி பொதுமக்கள், பட்டா மற்றும் குடிநீர் பிரச்சினை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., "பட்டா தொடர்பாக அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறேன்; விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் குடிநீர் பிரச்சினை போக்கும் வகையில் விரைவில் போர்வெல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதிப்படத் தெரிவித்துள்ளார். 

 

இந்த நிகழ்வின் போது, பா.ம.க. நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.