ட்ரெண்டிங்

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வானியல் குறித்த கலந்துரையாடல்!

 

சேலம் மாவட்டம், கோட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வானியல் குறித்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

இதில் வானியல் மற்றும் வானியல் மேற்படிப்பு படிப்பதற்கான தகவல்கள் குறித்து விஞ்ஞானி சதீஷ்குமார் சரவணன், மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார். மேலும், ட்ரோன்களின் இயக்கம் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இதைத் தொடர்ந்து, தொலைநோக்கி மூலம் கோள்களைப் பார்க்கும் வழிமுறைகள் குறித்து மாணவிகளுக்கு செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 300- க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

பழமையான கோட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேலம் மாவட்டத்தில் உள்ள பழமையான முக்கிய அரசுப் பள்ளிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.