ட்ரெண்டிங்

75- வது குடியரசுத் தினம் - சேலத்தில் கொண்டாட்டம்!

75- வது குடியரசுத் தினம் - சேலத்தில் கொண்டாட்டம்! 

75- வது குடியரசுத் தினத்தையொட்டி, சேலம் அண்ணா பூங்கா அருகில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப., மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

அதைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் மொழிப்போர் தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகளும், சிறந்த காவல்துறையினருக்கு விருதுகளும், சான்றிதல்களும் வழங்கினார். பின்னர், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 

அதன் தொடர்ச்சியாக, சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் குடியரசுத் தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் தேசிய கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளும், பள்ளி மாணாக்கர்களுக்கு நோட்டு புத்தகங்களையும், பேனாக்களையும் வழங்கினார். 

இதனால் சேலம் மாவட்டம் முழுவதிலும் குடியரசுத் தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியது என்றால் மிகையாகாது.