ட்ரெண்டிங்

ஈரோடு- திருநெல்வேலி தினசரி ரயில் சேவை நீட்டிப்பு!

 

ஈரோடு- திருநெல்வேலி தினசரி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

 

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஈரோடு- திருநெல்வேலி தினசரி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு- திருநெல்வேலி தினசரி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இன்று (ஜன.24) , திருநெல்வேலி- ஈரோடு தினசரி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாளை (ஜன.25) முதலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ரயில்கள், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், தென்காசி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.