ட்ரெண்டிங்

திருச்சி- பாலக்காடு ரயில் சேவைத் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

 

திருச்சி- பாலக்காடு ரயில் சேவைத் தொடர்பான முக்கிய அறிவிப்பை சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. 

 

இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூர்- திருச்சி ரயில் வழித்தடத்தில் ரயில் தண்டவாளத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், வரும் ஜனவரி 23, 26, 30 ஆகிய தேதிகளில் திருச்சி ஜங்சன்- பாலக்காடு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

 

அதன்படி, மேற்கண்ட நாட்களில் திருச்சி ஜங்சன்- பாலக்காடு டவுன் முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்படும். அதாவது, மதியம் 02.00 மணிக்கு புறப்படும். அதேபோல், பாலக்காடு டவுன்- திருச்சி ஜங்சன் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து திருச்சிக்கு ரயில் இயக்கப்படாது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.