ட்ரெண்டிங்

அப்பா பைத்தியம் சுவாமிகளின் கோயிலில் குருபூஜை விழா!

 

சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளின் திருக்கோயிலில் 24- ஆம் ஆண்டு குருபூஜை விழாவும், ஸ்ரீ சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை விழாவும், அன்னமளிப்பு விழாவும் இன்று (ஜன.18) நடைபெற்றது.

 

காலை 04.30 மணி முதல் திருவிளக்கு வழிபாடும், ஆனைந்து வழிபாடும், புனிதநீர் வழிபாடும், விநாயகர் வழிபாடும், திருமகள் வழிபாடும், சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் வேள்வி பேரொளி வழிபாடும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காலை 07.30 மணி முதல் ஞான விநாயகர், ஞான முருகர், சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12.00 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது.

 

குருபூஜையில் 500- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.