ட்ரெண்டிங்

பெரியார் பல்கலை. சிறப்பு தணிக்கைக் குழு அதிரடி ஆய்வு!

 

பெரியார் பல்கலைக்கழகத்தில் சிறப்பு தணிக்கைக் குழு அதிரடி ஆய்வை மேற்கொண்டு வருகிறது. இதனால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சேலம் கருப்பூரில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு புகார்கள் குவிந்து வரும் நிலையில், அனுமதியின்றி நிறுவனம் தொடங்கிய வழக்கில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். தலைமறைவாக உள்ள பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், துணை பேராசிரியர் சதீஸ் ஆகியோரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

 

இந்த சூழலில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் குறித்து தமிழ்நாடு அரசின் சிறப்பு தணிக்கைக்குழு அதிகாரிகள் அதிரடி ஆய்வை நடத்தி வருகின்றனர். நான்கு குழுவாகப் பிரிந்து, பல்கலைக்கழகத்தில் உள்ள அலுவலகங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.