ட்ரெண்டிங்

பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வருகிறார் ஆளுநர்!

 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, நாளை (ஜன.11) சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு செல்லவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 சேலம் மாவட்டம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக ஜெகநாதன் என்பவர் கடந்த 2021- ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் தொடங்கியதாக பல்கலைக்கழகத்தின் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் புகார் அளித்திருந்தார்.

 

இது தொடர்பாக விசாரணை நடத்திய கருப்பூர் காவல்துறையினர், துணைவேந்தரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தற்போது, அவருக்கு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை வழங்கியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (ஜன.11) பெரியார் பல்கலைக்கழகத்துக்கு செல்லவுள்ளார்.

 

அங்கு நடைபெறவிருக்கும் அலுவலர்கள் சந்திப்பில், அவர் கலந்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.