ட்ரெண்டிங்

சேலத்தில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசன நிகழ்ச்சி!

 

சேலம் மாவட்டம், மூன்று ரோட்டில் உள்ள வரலட்சுமி மஹாலில் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம் நிகழ்ச்சி நேற்று (ஜன.05) தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கும், அலமேலு அம்மாளுக்கு பல்வேறு வகை ஹோமங்கள், கோமாதா பூஜை, விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம், திருவாராதனம் நடைபெற்றது. பின்னர், மஹா தீபாராதனையம் நடைபெற்றது. இதில் 500- க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

 

சிறப்பு பூஜையாக, வரும் ஜனவரி 10- ஆம் தேதி அன்று வெங்கடாஜலபதிக்கு சகஸ்ர கலச அபிஷேகமும், ஜனவரி 11- ஆம் தேதி தோமால சேவையும், ஜனவரி 14- ஆம் தேதி விஷ்ணு சகஸ்ர நாமாவளி ஹோமமும், மகா பூர்ணாஹுதியும், ராஜ உபசாரமும், அதைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடக்க உள்ளது.

 

இந்த நிகழ்ச்சி, வரும் ஜனவரி 14- ஆம் தேதி வரை நடக்க உள்ள நிலையில், ஒரே இடத்தில் பெருமாளின் 10 நாள் அவதாரத்தைக் கண்டுகளித்து அருள் பெற, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.