ட்ரெண்டிங்

கத்தியைக் காட்டி பணம் பறித்த ரவுடி கைது!

 

சேலம் மாவட்டம், ஜான்சன் பேட்டையைச் சேர்ந்த கஜேந்திரன் என்ற கோபி (வயது 29). ரவுடியான இவர் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி பரசுராமின் மைத்துனர் ஆவார். இந்த நிலையில், செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக்கேயன் என்பவரிடம் கஜேந்திரன் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்து சென்றார்.

 

இது குறித்து கார்த்திக்கேயன், சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்குப்பதிவு செய்து, கஜேந்திரனை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.