ட்ரெண்டிங்

கிறிஸ்துமஸ்- சேலம் வழியாகச் செல்லும் சிறப்பு வந்தே பாரத் ரயில் அறிவிப்பு!

 

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து கோழிக்கோடுக்கு செல்லும் சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து கோழிக்கோடுக்கு சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு வந்தே ரயில் சேவைக்கான டிக்கெட் முன்பதிவுத் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

டிசம்பர் 25- ஆம் தேதி அன்று அதிகாலை 04.30 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், அன்றைய தினம் பிற்பகல் 03.20 மணிக்கு கோழிக்கோடு ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த சிறப்பு வந்தே பாரத் ரயில், பெரம்பூர், காட்பாடி, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.