ட்ரெண்டிங்

டிச.29- ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற டிசம்பர் 29- ஆம் தேதி அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் இ.ஆ.ப. அறிவித்துள்ளார். 

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்ட டிசம்பர் 2023 மாதத்திய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற டிசம்பர் 29- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண்.215- ல் நடைபெற உள்ளது.

விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்மந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம், இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.